ஆப்நகரம்

போலீஸ் காவலில் வணிகர் மரணம்: தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு!!

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 26) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 25 Jun 2020, 4:47 pm
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரும் கோயில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தென்மாவட்டங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Samayam Tamil vr


இந்த நிலையில், தனது தந்தை, சகோதரரின் மரணத்துக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அதுவரை இருவரின் உடலை வாங்கப்போவதில்லை என்று போலீஸ் காவலில் உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி கூறியுள்ளார்.

இதனிடையே, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் காவலில் இறந்ததை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை (ஜூன் 26) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, நெல்லையில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

போலீஸ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: விக்கிரமராஜா வலியுறுத்தல்

இதேபோன்று, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர், உதலி ஆய்வாளர், மருத்துவ அறிக்கை அளித்த மருத்துவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டு்ம். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்து காவலர்களுக்கும் புகார் மனு அளிக்கும் அறப்போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமுடக்கம் காரணமாக, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை தான் வணிக நிறுவனங்கள் திறந்துள்ளன. இந்த நிலையில், மாநிலம் தழுவிய அளவில் நாளை கடையடைப்பு நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி