ஆப்நகரம்

ஆக்சிஜன் அளவில் திருப்பம்: தூத்துக்குடியில் பிரச்சினை இல்லை எனத் தகவல்!

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதாகவும் நோயாளிகள் அதிகரிக்கும்போது தேவை ஏற்பட்டால் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 7 May 2021, 11:19 pm
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக அதிக அளவில் அனுமதியாகி வருகின்றனர்.
Samayam Tamil ஆக்சிஜன் அளவில் திருப்பம்: தூத்துக்குடியில் பிரச்சினை இல்லை எனத் தகவல்!


இந்த சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா கண்காணிப்பு அதிகாரி குமார் ஜெயந்த் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் அவர் கூறுகையில், “தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தினமும் 3 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப் படுகிறது. தனியார் மருத்துவமனைகள் மூலம் ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. நாளொன்றுக்கு சுமார் 4 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 700 முதல் 800 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.

இதையடுத்து அவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய் கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது அவசியம். அதேபோன்று ஊரடங்கு காலங்களில் மக்கள் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிய வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி... பணியை தொடங்குவதில் இப்படியொரு சிக்கல்!

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆக்சிசன் தட்டுப்பாடு இல்லை. போதிய அளவு இருப்பு உள்ளது.

தற்பொழுது சுமார் 6 கிலோ லிட்டர் அளவு ஆக்ஸிஜன் உள்ளது. நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஆக்சிசன் தயார் நிலையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சுமார் 450 படுகைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருக்கிறது. கூடுதலாக 200 படுக்கை வசதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

அடுத்த செய்தி