ஆப்நகரம்

சாத்தான்குளம்: நெஞ்சுவலியும் காய்ச்சலுமே காரணம் - தூத்துக்குடி எஸ்.பி

இந்த தந்தை மகன் மர்ம மரணம் குறித்து கோவில்பட்டி ஜெ.எம்.1 நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Samayam Tamil 23 Jun 2020, 6:22 pm
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் இருவரும் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil தந்தை - மகன் மரணம்


இதுவரை இது தொடர்பாகக் காவல்துறையினர் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார். ஆனால், காவலர்கள் தாக்கியதில்தான் இருவரும் உயிரிழந்தனரா என்று பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அருண் பாலகோபாலன் தந்தை ஜெயராஜுக்கு நெஞ்சுவலியும், மகன் பென்னிக்ஸுக்கு காய்ச்சலும் இருந்தது. அவர்கள் உயிரிழக்கவும் அதுதான் காரணம் என்று மாவட்ட எஸ்.பி. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


அதிர்ச்சியளிக்கும் விதமாகவும், சந்தேகத்திற்குரியதாகவும் இருக்கும் இந்த தந்தை மகன் மர்ம மரணம் குறித்து கோவில்பட்டி ஜெ.எம்.1 நீதிபதி பாரதிதாசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த செய்தி