ஆப்நகரம்

குப்பைத் தொட்டியில் ஆதார் கார்டுகள்... அள்ளிச் சென்ற பணியாளர்கள்

தகவலறிந்த சுகாதார பணியாளர்கள் குப்பையுடன் அள்ளி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

Samayam Tamil 17 Nov 2020, 10:40 pm
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் குப்பைத்தொட்டியில் 50க்கும் மேற்பட்ட ஒரிஜினல் ஆதார் கார்டுகள் கிடைத்துள்ளன.
Samayam Tamil ஆதார் கோப்புப்படம்


தனி மனிதனின் அடையாளம் என்று மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஆதார் கார்டுகள் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்து நகரில் உள்ள தனியார் ஆங்கில பள்ளி அருகே உள்ள குப்பை தொட்டியில் 50க்கும் மேற்பட்டவை கிடைத்துள்ளன.

இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் வைரலாக பரப்பி வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த சுகாதார பணியாளர்கள் குப்பையுடன் அள்ளி சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

2 முயல் ரூ. 500, இடம்: கோவை மத்தியச் சிறை!

இங்கு ஒரிஜினல் ஆதார் கார்டு குப்பைத்தொட்டி எப்படி வந்தது யார் போட்டார்கள் என்பது குறித்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது

அடுத்த செய்தி