ஆப்நகரம்

தூத்துக்குடி துறைமுகத்தில் மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு!

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 24 Oct 2021, 9:00 pm

ஹைலைட்ஸ்:

  • தூத்துக்குடி துறைமுகத்தில் மேனேஜர் வேலை
  • நவம்பர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Thoothukudi News

தூத்துக்குடியில் உள்ள வ. உ.சி. துறைமுகம் இந்தியாவின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த 2011ம் ஆண்டு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் நினைவாக அவரது பெயர் இந்த துறைமுகத்திற்கு சூட்டப்பட்டது.

இந்த துறைமுகத்தில் சீனா, இலங்கை, ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெற்று வருகிறது.


வ.உ.சி துறைமுகத்தில் தற்போது மேனேஜர் பணிக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத்தேர்வு அல்லது இண்டெர்வியூ முறையில் இந்த வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவுள்ளன.
துறைமுக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பின் முழு விபரம்: Advertisement
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை Secretary, V.O. Chidambaranar Port Trust, Administrative Office, Bharathi Nagar, Tuticorin -628 004. என்ற முகவரிக்கு அடுத்த மாதம் 22-ம் தேதிக்குள் சென்று சேறும்படி அனுப்ப வேண்டும்.

அடுத்த செய்தி