ஆப்நகரம்

கை கொடுக்கும் காற்றாலை மின்சாரம்: இனி நோ பவர்கட்!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வது அதிகரித்துள்ளதாக மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Curated bySrini Vasan | Samayam Tamil 18 May 2022, 3:55 pm
தமிழகத்தில் நெல்லை, குமரி, தூத்துக்குடி, போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள காற்றாலைகள் மூலம் சுமார் 5000 மெகாவாட்டுக்கு அதிகமான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
Samayam Tamil காற்றாலை மின்சாரம்


தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 600க்கும் மேற்பட்ட காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தெய்வச்செயல்புரம், வாகைகுளம், கோவில்பட்டி எட்டயபுரம் கழுகுமலை, கயத்தார், கடம்பூர், போன்ற போன்ற பகுதிகளில் ஏராளமான காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் நிலக்கரி இருந்தும் மின்உற்பத்தி நிறுத்தம்: காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
கடந்த 10 நாட்களாக மாவட்டத்தில் பலத்த காற்று வீச துவங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுவது அதிகரித்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இந்த காற்றாலைகள் மூலம் ஒரு மணி நேரத்தில் 750 முதல் 1000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி நடைபெற்று வருவதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி