ஆப்நகரம்

முன்னாள் டிஎஸ்பியின் 19 வயது மகள் மாயம், அவிழுமா மர்மம்?

திருச்சியில் அழகுக்கலை பயிற்சி அகாடமியில் பயின்று வந்த இளம் பெண் திடீரென மாயமான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 8 Jan 2021, 2:31 pm
திருச்சி கருமண்டபம் ஸ்டார் நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். பணி ஓய்வு பெற்ற டிஎஸ்பி. இவரது மனைவி மீனாட்சி. ஆசிரியை. இவர்களின் மகள் கௌரி. வயது 19.
Samayam Tamil முன்னாள் டிஎஸ்பியின் 19 வயது மகள் மாயம், அவிழுமா மர்மம்?
முன்னாள் டிஎஸ்பியின் 19 வயது மகள் மாயம், அவிழுமா மர்மம்?


12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள கெளரி, திருச்சி தில்லை நகர், சாஸ்திரி ரோட்டில் டிரன்ட்ஸ் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையத்தில் பியூட்டிஷியன் கோர்ஸ் படித்து வருகிறார்.

கெளரி தனது தாயுடன்தான் தினமும் ஆட்டோவில் பயிற்சி மையத்திற்குச் சென்று வந்துள்ளார். அதேபோல் சில தினங்களுக்கு முன் தாயுடன் சென்று கெளரி பயிற்சி மையத்திற்குச் சென்றுள்ளார்.

ஆட்டோவில் காலை இறக்கிவிடப்பட்ட கெளரி மாலை வந்தும் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.

டிராக்டர் பிரச்சினை, தாயை கையால் அடித்து கொன்ற மகன்கள்!

பல இடங்களில் தேடியும் கௌரி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து கௌரியின் தாய் மீனாட்சி தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாயமான கௌரி கடத்தப்பட்டாரா அல்லது வேறு எங்கும் சென்று விட்டாரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி