ஆப்நகரம்

டிராக்டர் பிரச்சினை, தாயை கையால் அடித்து கொன்ற மகன்கள்!

முசிறி அருகே குடும்பதகராறில் தாய் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு மகன்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 8 Jan 2021, 12:51 pm
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா தா. பேட்டை அருகே மகாதேவி வயலூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். வயது 70. விவசாயி. இவரது மனைவி நாகரத்தினம். வயது 65. இவர்களுக்குப் பிரபாகரன்(42), பிரகாஷ்(40) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
Samayam Tamil டிராக்டர் பிரச்சினை, தாயை கையால் அடித்து கொன்ற மகன்கள்!
டிராக்டர் பிரச்சினை, தாயை கையால் அடித்து கொன்ற மகன்கள்!


இவர்களில் பிரபாகரனுக்குத் திருமணம் நடந்து முடிந்தது. பிரபாகரன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். பிரகாஷ் தனது பெற்றோருடன் உள்ளார். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

இவர்களுக்குச் சொந்தமான டிராக்டர் வாகனத்திற்குப் புதிதாக டிப்பர் வாங்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த சூழலில், டிப்பர் வாங்குவது தொடர்பாக பிறகாசுக்கும், தாய் நாகரத்தினத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் பிரகாஷ், பிரபாகரன் ஆகியோர் தனது தாயாரிடம் டிப்பர் வாங்கப் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராற்றில் பிரகாஷ் குச்சியாலும், பிரபாகரன் கையாளும் நாகரத்தினத்தை அடித்ததாக கூறப்படுகிறது.

சிறுமியிடம் குடும்பம் நடத்திய வாலிபர் கைது..!

இதையடுத்து அருகிலிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகரத்தினத்தை முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இந்த நிலையில் அங்குச் சிகிச்சை பலனின்றி நாகரத்தினம் பரிதாபமாக இறந்துபோனார்.

சம்பவம் குறித்து செல்வராஜ் தா.பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பிரகாஷ் பிரபாகரன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி