ஆப்நகரம்

சுஜித்தைப் போல் மற்றொரு சோகம், திருச்சியில்தான் இதுவும்!

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 5 வயது சிறுமி பரிதாபமாகப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Jan 2021, 6:06 pm
திருச்சி ஏர்போர்ட் ராஜமாணிக்கம் பிள்ளை நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
Samayam Tamil வீடு கட்ட குழியில் மழை நீர், விளையாடும்போது சிறுமி விழுந்து துடிதுடித்துப் பலி!
வீடு கட்ட குழியில் மழை நீர், விளையாடும்போது சிறுமி விழுந்து துடிதுடித்துப் பலி!


இவர் வீட்டின் அருகே காலி மனையில் வீடு கட்டுவதற்காகப் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் நேற்று மாலை இவரது மகள் பாண்டி ஸ்ரீ(5) விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது பாண்டி ஸ்ரீ தவறி அங்குத் தோண்டப்பட்டு மூடப்படாமலிருந்த சுமார் 4 அடி ஆழக் குழியில் விழுந்துள்ளார். இதற்கிடையே அந்த குழியில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது.

இதனை அறியாத குடும்பத்தினர் பாண்டிஸ்ரீயை அந்தப் பகுதி முழுவதிலும் தேடியுள்ளனர். அப்போது குழிக்குள் அந்த சிறுமி கிடந்ததை அறிந்து உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்று சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

பள்ளிகளை மூட உத்தரவு: தீவிர ஆய்வில் ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள்!

அங்குச் சிறுமியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் முன்னதாகவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து சுஜீத் என்ற சிறுவன் உயிரிழந்த விவகாரத்திற்கு பின்பும் இதுபோன்ற மரணங்கள் தொடரத்தான் செய்கிறது.

அடுத்த செய்தி