ஆப்நகரம்

திருச்சி: கழிவறையில் 800 கிராம் தங்கம்... கொண்டுவந்தது யார்?

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கழிவறையில் தங்கத்தை போட்டுச் சென்ற மர்ம நபர்கள்

Samayam Tamil 2 Mar 2021, 11:17 pm
திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா நோய் தொற்று காரணமாக சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil trichy airport


இந்நிலையில் விமான நிலைய இமிகிரேஷன் அருகில் உள்ள கழிவறையில் விமான நிலைய ஊழியர் ஒருவர் சுத்தம் செய்ய சென்றுள்ளார். அப்போது அங்கு 40 லட்சம் மதிப்புள்ள 840 கிராம் தங்க நகைகள் கிடந்துள்ளது.
கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உள்ளார்.

உடனே அங்கு வந்த அதிகாரிகள் தங்கத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து வந்த மர்ம நபர் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு பயந்து கடத்தல் தங்கத்தை கழிவறையில் விட்டுச் சென்றது தெரியவந்தது.

அட போங்கப்பா..! நெஞ்சம் மறப்பதில்லை படமே மறந்துவிடும் போல...செம கடுப்பில் ரசிகர்கள்

மேலும் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அண்மைக்காலமாக திருச்சி விமான நிலையத்தில் தொடர் கடத்தல் சம்பவங்கள் அரங்கேறி வருவது கவனிக்கத்தக்கது.

அடுத்த செய்தி