திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலத்துறை சார்பில் திருமணமான பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு மற்றும் வருவாய் துறை சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,
மெட்ரோ நிர்வாகிகளான திருநங்கைகள்... குவியும் பாராட்டு
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பிரகாசமாக உள்ளது. 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி தான் வெற்றி பெறும்.அ.ம.மு.க உடன் கூட்டணி அமைப்பது குறித்து தலைமை தான் முடிவெடுக்க வேண்டும்.ஆனால் அ.தி.மு.க தலைமை அ.ம.மு.க வுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் இல்லை.
சசிகலாவை நிச்சயம் நான் சந்திக்க வாய்ப்பில்லை என்றார்.