ஆப்நகரம்

தேர்தல் பணிக்குச் செல்லும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Samayam Tamil 2 Mar 2021, 2:01 pm
கொரோனோ தடுப்பு நடவடிக்கையின் முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோஒனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil trichy collector.


இதனிடையே தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு அதிகாரிகள், அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி போட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கொண்ட பட்டியல் மாவட்ட நிர்வாகத்திடம் பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது. தேர்தல் பணிக்காக மற்ற துறை அதிகாரிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் போது இவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மோடியை அடுத்து ராதிகா: இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம் தான்


இந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட, குறிப்பிட்ட நாளில் தடுப்பூசி போடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி