ஆப்நகரம்

அமமுக மட்டும் பணம் தரல: திருச்சி வேட்பாளர் ஓட்டுப் போட்டு பேட்டி!

அமமுக மட்டுமே வாக்குக்குப் பணம் தரவில்லை எனத் திருச்சி மேற்கு தொகுதி அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்களித்த பின் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 6 Apr 2021, 1:39 pm
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் திருச்சி ஜான் வெஸ்ட்ரி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
Samayam Tamil அமமுக மட்டும் பணம் தரல: திருச்சி வேட்பாளர் ஓட்டுப் போட்டு பேட்டி!


அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த முறை ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றேன். ஆனால் இந்த முறை பொதுமக்கள் நிறைவான வரவேற்பு கொடுத்தனர்.

எனவே இந்த முறை வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். நாங்கள் மட்டுமே வாக்குக்குப் பணம் கொடுக்காமல் செயலைகளைக் கூறி வாக்கு கேட்டோம்.

கேஸ் வாங்கிய திமுக நேரு... திருச்சி மேற்கில் தேர்தல் ரத்து?

மற்ற இரண்டு கட்சிகளும் பணம் கொடுத்தார்கள். எனவே மக்கள் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து வெற்றியைத் தருவார்கள் என நம்புகிறோம். தமிழகமெங்கும் குக்கர் விசில் அடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த செய்தி