ஆப்நகரம்

போட்டியில் பங்கேற்கச் செல்ல காசில்லை: திருச்சி வீரர்களுக்கு உதவுமா அரசு?

சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளப் பயண நிதி உதவி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் விளையாட்டு வீரர்கள் மனு அளித்தனர்.

Samayam Tamil 19 Apr 2021, 7:11 pm
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள வலசுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சரவணகுமார். திருச்சி மாவட்டம், வளநாடு கைகாட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
Samayam Tamil போட்டியில் பங்கேற்கச் செல்ல காசில்லை: திருச்சி வீரர்களுக்கு உதவுமா அரசு?


சரவணகுமார் தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்று நேபாள நாட்டில் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி நடைபெறும் சர்வதேச தடகளப் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்து கொள்ள உள்ளார்.

இதேபோல் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்துள்ள தோப்புப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜன் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அருண் தேசியளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச கபடிப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டார். வரும் 27ஆம் தேதி நேபாள நாட்டில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

துணிய கட்டுங்க மிஸ்டர் அய்யாக்கண்ணு!

அருண், மற்றும் சரவணகுமார் இருவரும் பயண உதவித் தொகை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு அளித்தனர். அவர்களுடன் மாற்றம் அமைப்பு நிர்வாகிகள் தாமஸ், மணிவேல் ஆகியோர் உடன் சென்றனர்.

அடுத்த செய்தி