ஆப்நகரம்

100 நாள் வேலை திட்டம்; விவசாய பணிகளுக்கு ஆள் இல்லை- அய்யாக்கண்ணு வேதனை!

மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு கோரிக்கை வைத்துள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 24 May 2022, 2:14 pm

ஹைலைட்ஸ்:

  • மானிய விலையில் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்க வேண்டும்
  • அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட உரிய நடவடிக்கை
  • விவசாய பணிகளுக்கு 100 நாள் வேலையாட்கள்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ayyakannu request govt to make arrangements for 100 naal thittam workers to do agricultural works
100 நாள் வேலை திட்டம்; விவசாய பணிகளுக்கு ஆள் இல்லை- அய்யாக்கண்ணு வேதனை!
தமிழகத்தில் கடந்த 1942 முதல் 1947ம் ஆண்டு வரை சுமார் 4 முறை மே மாதம் விவசாய பணிகளுக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து சுமார் 77ஆண்டு கழித்து இந்த வருடம் மே மாதம் மேட்டூர் அணையிலிருந்து விவசாய பணிகளுக்காக தண்ணீர் திறந்து விடப்பட இருக்கிறது.
இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையை விவசாய பணிகளுக்காக திறந்துவிட்டார். இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை சுமார் 16லட்சம் ஏக்கர் சாகுபடி பணிக்காக உள்ளது.

மேலும் இந்த 16லட்சம் ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். அப்போது தான் விவசாயிகள் நடவுப் பணிகளை சீராக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கின்றனர். மேலும் கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்வதற்கான அனைத்து வாய்க்கால்களும் தூர்வாரப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உரங்கள் கட்டுப்பாடும் இல்லாமல் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

கட்டாயத்தில் வருவதா காதல்? சமூக அக்கறை எங்கே செல்கிறது? உலுக்கும் உயிர் பலி!

இதுகுறித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; கடந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை வந்தாலும் விவசாயி அழிந்து போகிறான், மழை வராவிட்டாலும் விவசாயி அழிந்து போகிறான்.

அதிக மழை பெய்ததால் கடந்த ஆண்டு பாதி விவசாயம் மட்டுமே கிடைத்தது. தற்போது மேட்டூரில் தண்ணீர் வந்து உள்ளது. ஆனால் விவசாயிகள் தங்களது நிலங்களில் உளுந்து மற்றும் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். அதற்கு இன்னும் ஒரு மாதம் தண்ணீர் இல்லாமல் இருந்தால்தான் சாகுபடியை எடுக்க முடியும்.

தண்ணீர் திறந்து விடுவதில் மகிழ்ச்சியாக இருந்தாலும் பல இடங்களில் வாய்க்கால்கள் பாதி வெட்டியும், வெட்டப்படாமல் உள்ளது. தூர் வாரினால் தான் எங்களுக்கு 3 அல்லது 4 மாதத்திற்கு வேண்டிய தண்ணீர் கிடைக்கும். தூர்வாரும் வரை தண்ணீரை குறைந்த அளவே விடுவித்து கடலுக்குப் போகாமல் பாதுகாக்க வேண்டும்.

பொட்டாஷ் 900 ரூபாய்க்கு விற்றது, தற்போது ஆயிரத்து 700 ரூபாய்க்கு சென்றுவிட்டது. கடையில் சென்று கேட்டால் இரண்டு ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர். வரப்பில் பில்லை அழிப்பதற்காக ரவுண்டு உப்பு நானூற்று இருபது ரூபாய்க்கு விற்றது. தற்போது 720 ரூபாய்க்கு வந்து விட்டது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

யூரியா கேட்கப் போனால் பூச்சிமருந்து உட்பட பல்வேறு பொருட்களை இணைத்து 500 ரூபாய் கொடுத்தால் தான் தருவேன் என சொல்கிறார்கள். எங்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. உரம் கிடைக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியம் கொடுத்து விலைகளை குறைக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்; கோடையில் விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் அதற்காக 100 நாள் வேலை திட்டம் துவக்கப்பட்டது. ஆனால், தற்போது 365 நாளும் அந்த வேலை கொடுப்பதால் விவசாயிகளுக்கு நடவு செய்யக் கூட ஆட்கள் இல்லை. எனவே, அவர்களை நடவு மற்றும் அறுவடை நேரங்களில் விவசாய பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுப்ப வேண்டும் என கூறினார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி