ஆப்நகரம்

பைக் பயணம்... புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்!

திருச்சி அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Samayam Tamil 2 Jan 2021, 11:12 am
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திரவியராஜ் (55). இவர் துவாக்குடி அருகே உள்ள அசூருக்கு திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் இரவு பயணித்து கொண்டிருந்தார்.
Samayam Tamil கோப்பு படம்
திருச்சி அருகே சாலை விபத்து -மூவர் பலி


அசூர் பிரிவு ரோடு அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது தஞ்சையில் இருந்து திருச்சி துவாக்குடி நோக்கி வந்த வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த விபத்தில் பைக்கில் வந்த தஞ்சை மாவட்டம், நவலூர் மாதா கோவில் தெருவை சேர்ந்த எட்வின் (23), வாழவந்தான் கோட்டையை சேர்ந்த புஷ்பராஜ் (28) திரவியராஜ் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமடைந்து மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரத்யேக செல்ஃபோன் பெற மாற்றுத்திறனாளிகளை அழைக்கும் ஆட்சியர்!

தகவலறிந்த துவாக்குடி போலீசார் விரைந்து வந்து மூன்று பேரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி