ஆப்நகரம்

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு...16 காளைகளை அடக்கிய இளைஞருக்கு பைக் பரிசு!

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற இளைஞருக்கு முதல் பரிசாக பைக் வழங்கப்பட்டது.

Samayam Tamil 20 Jan 2021, 7:03 pm
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி, திருச்சி மாவட்டம் சூரியூரில் தை திங்கள் இரண்டாம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
Samayam Tamil திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆக்ரோஷமாக காளைகளை அடக்கும் இளம் காளைகள்


இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இதில் 450 மாடுபிடி வீரர்களும். 550 காளைகளும் பங்கேற்றனர்.

காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் ஆக்ரோஷமாக அடக்க முயன்றனர்.

புகழ்பெற்ற சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டி, சூப்பர் காட்சிகள்!

16 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சிவா என்ற இளைஞருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.

காளைகள் முட்டியதில் காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 39 பேர் காயமடைந்தனர். இவர்களில் படுகாயமடைந்த நான்கு பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி