ஆப்நகரம்

திருச்சி அனைத்து பறையர் மாநாட்டில் அதிரடி தீர்மானங்கள்: அரசு என்ன செய்யப் போகிறது!

அனைத்து பறையர் மாநாட்டில் சாதி கணக்கெடுப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது...

Samayam Tamil 26 Feb 2021, 8:36 pm
திருச்சி காஜாமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து பறையர்களின் அமைப்பின் சார்பில் மாநில எழுச்சி மாநாடு நடைபெற்றது.
Samayam Tamil திருச்சி அனைத்து பறையர் மாநாட்டில் அதிரடி தீர்மானங்கள்: அரசு என்ன செய்யப் போகிறது!


இந்த மாநில எழுச்சி மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தின் கூட்டுறவுச் சங்கத்தில் சாம்பவர் பறையர்க்கு 50 சதவீத நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

சாம்பவர் பறையர் இன மக்களுக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் கொடுத்து வாழ்வாதாரத்தைக் கொடுத்து உயர்த்திட வேண்டும்.

திமுகவில் மரியாதை இல்லை... தனிக்கட்சி தொடங்கிய திமுக பேச்சாளர்

தமிழகத்தில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும். சாம்பவர், சாம்பவ பறையர்கள், பிரிவில் உள்ள அனைவரையும் சாம்பவவர் குல வேளாளர் எனப் பொதுப்பெயரில் மத்திய மாநில அரசுகள், அரசு பதிவேட்டில் பதிவு செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
இவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த செய்தி