ஆப்நகரம்

கோர்ட் வழக்குகள் குறித்து திருச்சியில் திரையிட்டு விழிப்புணர்வு...

திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் ஒன்று மாவட்டம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

Samayam Tamil 13 Oct 2021, 7:49 pm
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனம் இன்று துவக்கி வைக்கப்பட்டது.
Samayam Tamil கோர்ட் வழக்குகள் குறித்து திருச்சியில் திரையிட்டு விழிப்புணர்வு...


தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் இந்திய நாட்டின் 65ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 45 நாட்கள் பல்வேறு வகையில் சட்ட விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் முதல் நாளான நடமாடும் சட்ட விழிப்புணர்வு வாகனத்தை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி கிளசன்டன் பிளசட் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிபதி செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வீட்டில் சிறையில் அய்யாக்கண்ணு: 2ஆம் நாள் உண்ணாவிரத போராட்டம் கோமத்துடன் விவசாயிகள்!
இந்த வாகனத்தின் திரையில் இலவச சட்ட உதவிகள் மற்றும் சிவில் வழக்குகள், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் பற்றிய விழிப்புணர்வு காட்சிகள் திரையிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி நீதிமன்ற தன்னார்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி