ஆப்நகரம்

ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு முக ஸ்டாலின் சொன்ன சப்ரைஸ்!

திருச்சியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடியில் கல்வி பயில தேர்வாகி உள்ள நிலையில் அவரது கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2021, 8:22 pm
திருச்சி மனப்பாறையை அடுத்த கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர் அருண்குமார். இவர் ஐஐடி, என்ஐடி போன்ற நிறுவனங்களில் சேர்வதற்கான ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.
Samayam Tamil ஜெஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவருக்கு முக ஸ்டாலின் சொன்ன சப்ரைஸ்!


திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னழகன்–பூவாத்தாள் தம்பதி. இவர்கள் மகன் அருண்குமார். வயது 17.

கரடிப்பட்டியில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேவல்ப்பட்டி அரசு பள்ளியில் படித்து வந்தார். இவருக்கு வாரத்தின் இறுதி நாட்களில் திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள்(NIT) ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் கல்வி பயில முறையான பயிற்சியை மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டில் வழங்கினர்.

இந்த சூழலில் கொரோனோ ஊரடங்கு, பள்ளிக்கூடங்களுக்கு அதிகமாக செல்ல முடியாத நிலை இவை அனைத்தையும் பொருட்படுத்தாமல் தன்னுடைய கடின உழைப்பால் ஜெஇஇ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பிணத்தை புதைக்கவாது சமமான கல்லறை வேணும்: பீட்டர் அல்போன்ஸ் திருச்சியில் கோரிக்கை!
பன்னிரண்டாம் வகுப்பில் 551 மதிப்பெண்கள் பெற்ற அருண் குமார் ஐஐடியில் கல்வி பயில எழுதிய நுழைவுத்தேர்வில் 17 ஆயிரத்து 61 ஆவது இடமும், ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வில் அகில இந்திய தர வரிசையில் 12 ஆயிரத்து 175 ஆவது இடமும் பெற்று உள்ளார். 27 ஆம் தேதி கலந்தாய்வில் கலந்து கொண்ட நிலையில் அருண் குமாருக்கு ஐஐடியில் படிக்கும் கனவு நனவாக உள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாணவர் அருண் குமாரை அழைத்து மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதியில் இருந்து 85 ஆயிரம் ரூபாய் காசோலையை வழங்கி பாராட்டுகளை நேற்று முன் தினம் தெரிவித்து உள்ளார்.

ஐஐடியில் அருன்குமார் சேர்க்கைக்கு செல்லும் நிலையில் அவரது கல்வி செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்பது அவரது பெற்றோர்களின் வேண்டுகோளாக இருந்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அருண்குமாரை நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட மாணவனின் கல்வி செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசு ஏற்கும் என உறுதி அளித்து உள்ளார். இது அருண்குமாரின் குடும்பத்தார் மற்றும் கரடிப்பட்டியில் வாழும் பொதுமக்கள் அனைவருக்கும் நெகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி