ஆப்நகரம்

தடையை மீறி திமுக அரசை கண்டித்து பாஜக பெரும் போராட்டம்: திருச்சியில் பரபரப்பு!

திருச்சி மாவட்டத்தில் தடையை உடைத்து தமிழ்நாடு அரசை கண்டித்து பாஜகவினர் நடத்திய பெரும் போராட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2021, 9:08 pm
திருச்சி மாவட்டத்தில் திமுக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Samayam Tamil தடையை மீறி திமுக அரசை கண்டித்து பாஜக பெரும் போராட்டம்: திருச்சியில் பரபரப்பு!


திருச்சி மாநகரில் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வர்த்தகர் பிரிவு, மற்றும் பட்டியல் இன அணியின் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன் தலைமையில்
பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழ்நாடு அரசை கண்டித்து தடையை மீறி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்ததை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை குறைக்கவில்லை என கூறி கோஷமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி என்ஐடி புதிய இயக்குநராக ஜி கண்ணபிரான் பதவி ஏற்பு!
அப்போது அங்கிருந்த நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திடீரென தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றனர். இதை அடுத்து போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுப்புகள் கொண்டு மறித்தனர்.

ஆனால், அவர்கள் உள்ளே செல்ல முயன்றதால் தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்களை கைது செய்தனர். இதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

அடுத்த செய்தி