ஆப்நகரம்

கொரோனா குறைஞ்சிடுச்சு... மீண்டும் இயல்புக்கு திரும்பிய திருச்சி GH

11 மாதங்களுக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டு - மீண்டும் பல்நோக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டது.

Samayam Tamil 28 Jan 2021, 11:29 am
திருச்சி புத்தூர் அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுவார்கள்.
Samayam Tamil Trichy GH Dean cutting ribbon


இம்மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர நிலை, இருதயவியல், குழந்தை மருத்துவம், குழந்தை அறுவை சிகிச்சை, உளவியல், கதிரியக்கவியல், புற்றுநோய் சிகிச்சை என பல்வேறு துறைகள் உள்ளது. ஆறு மாடிகளைக் கொண்ட இந்த பல்நோக்கு மருத்துவமனையில் 700 படுக்கைகள் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து இந்த பல்நோக்கு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

10.30க்கு சசிகலா விடுதலை... 11 மணிக்கு ஜெ.நினைவிடம் திறப்பு


தற்போது கொரோனா தாக்கம் ஒற்றை இலக்கத்திற்கு வந்துள்ள நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்போது அதே வளாகத்தில் உள்ள தனி வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை தூய்மை படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மீண்டும் பல்நோக்கு மருத்துவமனையாக நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது.

என்னை மாதிரி ஒரு அப்பா கிடைப்பது பெரிய விஷயம், விஜய்க்கு புரியல: எஸ்.ஏ. சி.

இதனை மருத்துவமனை டீன் வனிதா ரிப்பன் வெட்டி மருத்துவமனையை திறந்து வைத்தார்.

அடுத்த செய்தி