ஆப்நகரம்

திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு திடீர் தடை...

உலகம் முழுவதும் கொரோனாவின் 2ஆம் அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகத் திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 10 Apr 2021, 10:35 pm
திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்தம் ஆயிரத்து 320 கடைகள் உள்ளது. அதில் 108 மளிகைக் கடைகள், 348 காய்கறி கடைகள், 79 பூக்கடைகள், 62 இறைச்சிக் கடைகள், 62 மீன் கடைகள், 65 ஸ்டால்கள், 28 பழக்கடைகள் உள்ளன.
Samayam Tamil திருச்சி காந்தி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு திடீர் தடை...


இது தவிரத் தரைக் கடைகள் ஏராளமானவை இயங்கி வருகின்றன. கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு காந்தி மார்க்கெட் மூடப்பட்டு ஜி கார்னர் மைதானம், தென்னூர் உழவர் சந்தை மைதானம், அண்ணா விளையாட்டு அரங்கம் சாலை மதுரை மைதானம் சத்திரம் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வந்தது.

அதன்பின் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி காந்தி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது கொரோனா 2ஆவது அலை காரணமாகத் தமிழக அரசு உத்தரவுப்படி காந்தி மார்க்கெட்டில் தரைக்கடை மற்றும் சில்லறை வியாபாரத்திற்கு 10ஆம் தேதி(இன்று) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருச்சி நூறு ஆண்டு பழைய கட்டிடம் சூதாட்ட புகாரால் இடிக்கத் திட்டம்!

இதற்கு மாறாக சில்லறை வியாபாரம் உழவர் சந்தைகள் மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையில் விற்பனை நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டுமே நடப்பதற்குத் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

அடுத்த செய்தி