ஆப்நகரம்

திருச்சி: அட கொரோனா தடுப்பு இவங்களுக்குதானப்பா முக்கியம்!

திருச்சியில் தேர்தல் பறக்கும் படையினருக்கும், ராணுவத்தினருக்கும் தடுப்பூசி போடும் பணி நல்லபடியாக இன்று தொடங்கியது.

Samayam Tamil 5 Mar 2021, 3:21 pm
தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி. தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வடமாநிலங்களிலிருந்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், எல்லை பாதுகாப்புப் படையினர், மத்திய ஆயுதப் படையினர் தமிழகத்திற்கு ரயில் மூலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil திருச்சி: அட கொரோனா தடுப்பு இவங்களுக்குதானப்பா முக்கியம்!


அதன் ஒரு பகுதியாக ஐதராபாத் மாநிலத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ரயில் மூலம் திருச்சிக்கு மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 96 வீரர்கள் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காகத் திருச்சி வந்துள்ளனர்.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு மரியாதை நடத்தி வருகின்றனர்.

சைக்கிளுக்கு ஹெல்மட் போட்ட சிறுவன், வியந்த திருச்சி கமிஷ்னர்!

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் துணை ராணுவத்தினர் மற்றும் பறக்கும் படை போலீசாருக்கு திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள நகர்நல ஆரம்பச் சுகாதார நிலையத்தில் கொரோனா(covid-19) தடுப்பூசி போடும் பணி தற்போது நடந்து வருகிறது.

அடுத்த செய்தி