ஆப்நகரம்

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவி சடலமாக மீட்பு!

திருச்சி மாவட்டத்தை ஒட்டியுள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி சாவில் சந்தேகம் எனப் புகார் எழுந்துள்ளது.

Samayam Tamil 20 Jan 2021, 3:02 pm
திருச்சி அருகே உள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரியில் பி. ஃபாா்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி, கல்லூரி விடுதியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவியின் தந்தை சமயபுரம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளித்திருக்கிறார்.
Samayam Tamil தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவி சடலமாக மீட்பு!
தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவி சடலமாக மீட்பு!


திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படித்து வந்த அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூா் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையா மகள் ராஜேஸ்வரி. இவர் கடந்த 17ஆம் தேதி இரவு தனது கிராமத்திலிருந்து கல்லூரி விடுதிக்கு வந்துள்ளார்.

திங்கள்கிழமை இரவு விடுதியில் உள்ள 3ஆவது மாடியிலிருந்த மாணவியைக் காணவில்லை. இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் சக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். கல்லூரி நிர்வாகத்தினர் வந்து பார்த்தபோது ரத்தக் காயங்களுடன் ஒரு அறையில் மாணவி சடலமாகக் கிடந்தார்.

தகவலறிந்து வந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் ராஜேஸ்வரியின் சாவில் மர்மம் உள்ளதாகக் கூறி கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் மண்டையை உடைத்து, தாலி செயின் உள்ளிட்டவை கொள்ளை!

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் ஜெயராம் தலைமையிலான போலீசார் மாணவி மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

மாணவியின் தந்தை சமயபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி