ஆப்நகரம்

திருச்சிக்கு இப்படியொரு வேதனையான சாதனை!

இந்தியாவிலேயே திருச்சி மாவட்டத்தில்தான் எய்ட்ஸ் சோதனை அதிகபட்சமாக நடைபெற்றுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார்.

Samayam Tamil 2 Dec 2020, 8:39 pm
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு பங்கேற்றார்.
Samayam Tamil திருச்சி மாவட்ட ஆட்சியர்


நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "சுகாதாரத் துறையினர் சிறப்பாக பணியாற்றியதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது விரைவில தடுப்பூசி வர உள்ளது. எனவே மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்.

திருச்சி மாவட்டத்தில் எய்ட்ஸ் சிகிச்சைகாக 35 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலமாக இதுவரை 9 ஆயிரத்து 511 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

'காந்தி அடிக்கல் நாட்டிய மார்க்கெட்டை இடம் மாற்றக்கூடாது'

இந்தியாவிலேயே திருச்சி மாவட்டத்தில் தான் இந்த பரிசோதனை அதிகபட்சமாக நடைபெற்றுள்ளது. இதன் காரணமாக 2010 இல் 1.8 சதவீதமாக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு தற்போது 0.03 சதவீதமாக குறைந்துள்ளது" என்று கலெக்டர் கூறினார்..

அடுத்த செய்தி