ஆப்நகரம்

குடும்பத்த விட்டிருங்க: திருச்சியில் கதறி அழுத விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!

அரசியலில் நேருக்கு நேர் மோதிப்பாருங்கள் ஆனா குடும்பத்த தொந்தரவு பண்ணாதீங்க என திருமண விழாவில் கண்கலங்கி பேசிய விஜயபிரபாகரனால் தேமுதிகவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Samayam Tamil 28 Oct 2021, 1:55 pm
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், விராலிமலை மேற்கு ஒன்றிய தொண்டரணி செயலாளர் கோபாலகிருஷ்ணன் இல்ல திருமண விழாவிற்கு பங்கேற்பதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் புதன்கிழமை வந்து இருந்தார்.
Samayam Tamil குடும்பத்த விட்டிருங்க: திருச்சியில் கதறி அழுத விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!


திருச்சி திருமணத்திற்கு வந்து இருந்த விஜய பிரபாகரனுக்கு தேமுதிக சார்பில் திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாரதிதாசன் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நொச்சிமேடு பகுதில் இருந்து திருமண மண்டபம் வரை தொண்டர்களின் இருச்சக்கர வாகன பேரணியாக சென்று விஜய பிரபாகரனை அழைத்து சென்றனர்.

அதனைத்தொடர்ந்து தொண்டர்களை சந்தித்தார். பின்னர் திருமண விழாவை நடத்தி வைத்த விஜயபிரபாகரன் மணமக்களை வாழ்த்திப் பேசினார். அப்போது பேசிய அவர் “அரசியலில் நேருக்கு நேரா மோதிப்பாங்க. ஆனா குடும்பத்த தொந்தரவு பண்ணாதீங்க. என் தந்தை நலமாக இருக்கிறார். அவரை நான் நன்றாக பார்த்தக் கொண்டிருக்கிறேன். அவரை யாரும் தவறாக பேசக்கூடாது” என கூறி மேடையில் அனைவர் முன் நிலையிலும் கண் கலங்கி அழத் தொடங்கினார்.

நகர்புற தேர்தலை சூப்பராக திருச்சியில் நடத்தணும்: தேர்தல் ஆணையர் ஸ்பெஷல் பேச்சு!
இதனால் பேச முடியாமல் “நா” தழுதழுத்து நிற்க கட்சி நிர்வாகிகள் நாங்கள் இருக்கின்றோம் என குரல் எழுப்பி அவரை ஆசுவாசப்படுத்தினர். அதன் பின்னர் மீண்டும் பேச்சை தொடங்கினார்.

நிகழ்ச்சியின்போது, தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட பொருப்பாளர் பாரதிதாசன், புதுகோட்டை வடக்கு மாவட்ட பொருப்பாளர் சுப்பிரமணி, திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் குமார், மாநகர மாவட்ட செயலாளர் கணேஷ் மற்றும் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி