ஆப்நகரம்

யெப்பா 300 ஏக்கரில் திமுக மாநாடா?...நேரில் உறுதி செய்தார் ஸ்டாலின்!

திமுகவின் 11ஆவது மாநில மாநாடு திருச்சி அருகேயுள்ள சிறுகனூரில் நடைபெற உள்ளது. மாநாட்டுத் திடலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Samayam Tamil 20 Jan 2021, 8:41 am
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 3 மாதங்களே உள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் தங்களது செல்வாக்கை நிலைநாட்டப் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பிரச்சார பயணங்கள் போன்றவற்றிலும் தீவிரம் காட்டி வருகின்றன.
Samayam Tamil யெப்பா 300 ஏக்கரில் திமுக மாநாடா... ஸ்டாலின் நேரில் உறுதி செய்தார்!
யெப்பா 300 ஏக்கரில் திமுக மாநாடா... ஸ்டாலின் நேரில் உறுதி செய்தார்!


இந்நிலையில், திமுகவின் 11ஆவது மாநில மாநாட்டைத் திருச்சியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காகத் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அந்த இடத்தை சுத்தம் செய்து, பந்தல் மற்றும் அலங்கார வளைவுகள் அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. திமுக முதன்மைச் செயலாளர் கே. என் நேரு தலைமையில் குறிப்பிட்ட நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் மு. க ஸ்டாலின் மாநாடு நடைபெறும் இடத்தை இன்று பார்வையிட்டார். திமுக தலைவர் மு. க ஸ்டாலின் விராலி மலை மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்குச் செல்லும் முன்பு இன்று மதியம் மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஏத்தியாச்சுப்பா கொடிய... இனி ஸ்ரீரங்கம் வேற லெவல்தான்!

திருச்சியில் ஏற்கனவே கடந்த 1996, 2006 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் திமுக மாநில மாநாடு சிறப்பாக நடைபெற்று உள்ளது. அதனைத் தொடர்ந்து மீண்டும் தற்போது திருச்சியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்துவதற்கான கட்சியினர் தீவிர பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி