ஆப்நகரம்

திமுகவில் மரியாதை இல்லை... தனிக்கட்சி தொடங்கிய திமுக பேச்சாளர்

அகில இந்திய மக்கள் கட்சியின் கொடி அறிமுக விழா மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

Samayam Tamil 26 Feb 2021, 2:07 pm
குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் முகமாக அறியப்பட்ட பலரும் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவி வருவதும், தனிக்கட்சி தொடங்கி வருவதும் தொடர்ந்து வருகிறது. தேர்தலும் விரைவில் அறிவிக்கப்படவிருப்பதால் இதுபோன்ற நகர்வுகள் கவனிக்கப்படுகின்றன.
Samayam Tamil dmk speaker new party.


மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரை சேர்ந்தவர் கவிஞர் அண்ணாதுரை இவர் திமுகவின் பேச்சாளராக இருந்து வந்தார் அவர் நேற்று திருச்சியில் அகில இந்திய மக்கள் கட்சி என்ற புதிய இயக்கத்தை தொடங்கினார் மேலும் கட்சியின் கொடியையும் தலைவர் அண்ணாதுரை அறிமுகம் செய்தார். அவருடன் மாநில ஒருங்கிணைப்பாளர் பத்மநாபன் செய்தித்தொடர்பாளர் ராஜகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாதுரை திமுகவில் அடிப்படையே சரியில்லை. அங்கு உரிய மரியாதை இல்லை என்பதால் வெளியேறி புதிய கட்சியை நானே தொடங்கி இருக்கிறேன். தேர்தலில் எங்கள் பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.

விழுதுகள் பரப்பிய கம்யூனிச வேர் விழுந்தது: கமல் ட்வீட்

அது தொடர்பாக திருக்கடையூரில் விரைவில் அறிமுக கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட வாரியாக உறுப்பினர் சேர்க்கையும் நிர்வாகிகள் நியமனமும் இருக்கும் கட்சியின் கொள்கை திட்டங்கள் அறிவிக்கப்படும் தொடர்ந்து திமுக அதிமுகவிற்கு எதிராக பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்...

அடுத்த செய்தி