ஆப்நகரம்

இந்த முறை அதிமுகவுக்கு அடி இன்னும் பலமா இருக்கணும்... உதயநிதி விருப்பம்!

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை போலவே, எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவும், பாஜகவுக்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 20 Nov 2020, 4:48 pm
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பன்னாங்கொம்பில் திமுக இல்ல நிர்வாகி ஒருவரின் திருமண விழாவை அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்தார். பின்னர் அந்த விழாவில் பேசிய அவர் அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார்.
Samayam Tamil உதயநிதி ஸ்டாலின்
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்


" 2019 எம்.பி. தேர்தலில் அதிமுகவிற்கும், அதனை குத்தகைக்கு எடுத்து வைத்துள்ள பாஜவிற்கும் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டினார்கள்.

அதனைவிட அதிகமான எழுச்சியை தற்போது பார்க்க முடிகின்றது. இதே எழுச்சியையும், உற்சாகத்தையும் கவனமாக சட்டமன்ற தேர்தல் வரை எடுத்துச் சென்று மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அரியணையில் ஏற்ற வேண்டும்.

திருச்சி வழியா திவக்குவளை செல்லும் உதயநிதி...எதுக்கு தெரியுமா?

இன்றிலிருந்து 100 நாட்கள் தேர்தல் பிரச்சனை தொடங்க இருக்கின்றேன். நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 10 நாட்கள் மக்களை சந்தித்து மக்கள் பிரச்சினைகளை கேட்க இருக்கின்றேன். மக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் பயந்தது இல்லை" என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக, திருமண விழாவில் பங்கேற்க வந்த உதயநிதியை வரவேற்று, அவரை ஊர்வலமாக அழைத்துச் செல்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்சி மத்திய மண்டல தலைவர், துணைத் தலைவர், 3 காவல்துறை கண்காணிப்பாளர்கள் தலைமையில் 450 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து திமுகவினர் ஊர்வலம் செல்லாமல் புறப்பட்டு சென்றனர்.

அடுத்த செய்தி