ஆப்நகரம்

தவசம் கொடுக்க காவிரியில் மூழ்கிய மருத்துவர் பிணமாக மீட்பு!

திருச்சியைச் சேர்ந்த மருத்துவர், தனது மாமியாரின் தாய்க்கு தவசம் கொடுக்கச் சென்ற இடத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 22 Jan 2021, 4:01 pm
திருச்சி திருவெறும்பூர் கைலாஷ் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் பிரியதர்ஷன். வயது 34. புள்ளம்பாடி அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
Samayam Tamil தவசம் கொடுக்க காவிரியில் மூழ்கிய மருத்துவர் பிணமாக மீட்பு!
தவசம் கொடுக்க காவிரியில் மூழ்கிய மருத்துவர் பிணமாக மீட்பு!


இவர் தனது மாமியாரின் அம்மாவுக்குத் திதி கொடுப்பதற்காக ஸ்ரீரங்கம் காவிரி அம்மா மண்டபம் படித்துறைக்கு இன்றுச் சென்றுள்ளார். திதி கொடுக்கும் பிராமண வழக்கப்படி, ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவரை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அதன்படி பிரியதர்ஷன், கரையில் சில சம்பிரதாய வழிபாட்டு முறையை முடித்துக் கொண்டு, காவிரி ஆற்றில் மூழ்கியுள்ளார். உள்ளே முங்கி பிரார்த்தனை செய்த மருத்துவர், வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, மருத்துவரின் உடலைத் தேடியுள்ளனர்.

சுற்றுலா சென்ற பக்தர்கள். தலைகீழாய்க் கவிழ்ந்த பேருந்து... நடந்தது என்ன?

இதற்கிடையே தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் உதவியுடன் மருத்துவர் கிஷோர் பிரியதர்ஷனை சடலமாக மீட்டனர்.

இதையடுத்து பிரியதர்ஷன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி