ஆப்நகரம்

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் திருச்சியில் சாமி தரிசனம்!

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சபரிமலைக்கு செல்ல முடியாத பக்தர்கள், திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு வந்து இருமுடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Samayam Tamil 21 Dec 2020, 6:54 pm
கொரோனா அச்சம் காரணமாக, சபரிமலையில் இந்த சீசனில் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது.
Samayam Tamil திருச்சி ஐயப்பன் கோயில்
ஐயப்பன கோயில் -திருச்சி


இதன் காரணமாக பல பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல முடியவில்லையே என்ற கவலையில் இருக்கின்றனர். இதனையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உள்ளூரில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருமுடி செலுத்தி வருகின்றனர்.

இதன்படி, கொரோனா கட்டுப்பாடுகளின் விளைவாக சபரிமலைக்குச் செல்ல முடியாத தமிழகத்தின் பிற பகுதிகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பக்தா்கள், திருச்சி ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி கட்டி வந்து நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டனர்.

வைகுண்ட ஏகாதசி வைபவம்... முத்துச்சரத்தில் ஜொலித்த ரங்கநாதர்!

ஆனால் நெய் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பிற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி