ஆப்நகரம்

கொரோனாவால் வருவாய் பாதிப்பு...முதியவர் எடுத்த விபரீத முடிவு

கொரோனா காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 17 Apr 2021, 5:34 pm

ஹைலைட்ஸ்:

  • கொரோனா இரண்டாம் அலை காரணமாக வருமானம் இழப்பு.
  • மனமுடைந்த வெல்டர் ரைமன்கான் ரயில் முன் பாய்ந்து தற்கொலை.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திருச்சி பொன்மலை
திருச்சி பொன்மலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட முதியவர்
திருச்சி பொன்மலை மஞ்சத்திடல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், அவர் திருச்சி கே.கே.நகர், வயர்லெஸ் ரோடு, அமலாபுரம் காலனியை சேர்ந்த ஜான் ரைமன்கான்(70) என்பது தெரியவந்தது.

இவருக்கு சந்தியா(60) என்ற மனைவியும், 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தனியார் தொழிற்சாலையில் வெல்டராக பணிபுரிந்து வந்த இவருக்கு, கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக வருமானம் இல்லை.. இதன் காரணமாக குடும்பத்தில் பிரச்சினை எழுந்ததாக தெரிந்தது.

எட்டு வயசு சிறுமியிடம் சில்மிஷம்... ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட புரோட்டா மாஸ்டர்!

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ஜான் ரைமன்கான் நேற்று மாலை திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற ரயில்வே ஊழியர்களுக்கான சிறப்பு ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி