ஆப்நகரம்

திருச்சிக்கு பாதாயாத்திரை சென்ற துர்கா ஸ்டாலின்: முக ஸ்டாலின் கட்சியோ நாத்திகம் பேசுது!

திமுக தலைவர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்தே சென்று வழிபாடு நடத்திய சம்பவம் பல்வேறு தரப்பினரிடையே பேசுப் பொருளாக மாறியுள்ளது.

Samayam Tamil 8 Oct 2021, 8:30 pm
தமிழ்நாடு முதல்வர், திமுக தலைவர் முக ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆன்மீக நம்பிக்கை அதிகம் கொண்டவராக வலம் வருகிறார். குறிப்பாக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் தொடங்கி அவர் கோவில் கோவிலாக சென்று வழிபடு செய்து வருகின்றார்.
Samayam Tamil திருச்சிக்கு பாதாயாத்திரை சென்ற துர்கா ஸ்டாலின்: முக ஸ்டாலின் கட்சியோ நாத்திகம் பேசுது!


கடந்த சில மாதங்களாக இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

அதைத் தொடர்ந்து கொரோனா ஊரடங்கு முறையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் திருவண்ணாமலை சென்று தனது தனிப்பட்ட வேண்டுதல்களை நிறைவேற்றினார்.


சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் சென்று சுப்ரமணியசுவாமியை வழிபட்டார். சண்முகர், வள்ளி தெய்வானையை வழிபட்டார் துர்கா ஸ்டாலின். அதே போல் திருச்செந்தூருக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் .

அந்த வகையில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்திருந்தார். அங்கு சென்று துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த சிஎம் மனைவி துர்கா ஸ்டாலினுக்குச் சிறப்பு வரவேற்பு!
துர்கா ஸ்டாலின் சமயபுரம் நெடுஞ்சாலை சுங்க கட்டணம் செலுத்தும் டோல் பிலாசாவில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே பாதயாத்திரை சென்று கோயிலில் வழிப்பட்டார்.

பாதயாத்திரை சென்ற துர்கா ஸ்டாலினுடன் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் உடன் சென்றார். நாத்திகம் பேசும் கட்சியின் தலைவர் மனைவி கோயில் கோயிலாக சுற்றி வருவது எதிர்க்கட்சியினர் விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேவேளை துர்கா ஸ்டாலின் ஆன்மீக பயணத்தை பொது மக்கள் வியந்து பார்த்து பாராட்டி வருகின்றனர்.

அடுத்த செய்தி