ஆப்நகரம்

பண மோசடி புகார்; விசிக கவுன்சிலர் வீட்டில் ரெய்டு!

எல்பின் தனியார் நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் பண மோசடி தொடர்பான புகாரின் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் பிரபாகரன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 12 Jul 2022, 5:43 pm
சேலம் மாவட்டம் பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜ்குமார் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா மற்றும் அதிகாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி மாநில துணை செயலாளராகவும், திருச்சி மாநகராட்சி 17-வது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரபாகரன் இல்லத்தில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
Samayam Tamil vck councillor


இதே போல் வடக்கு தாராநல்லூர் காமராஜ் நகரில் உள்ள அவரது உறவினர் மாமியார் வீட்டில் கடலூர் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விசிக நிர்வாகி பிரபாகரன் வீட்டில் இல்லை இல்லை எனக் கூறப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் சுமார் 18-க்கும் மேற்பட்ட இடங்களில் பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

நிதி மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் தனியார் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற பொருளாதார குற்ற தடுப்புப்பிரிவினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நிறுவன இயக்குனர் ராஜா மற்றும் ரமேஷ்குமார் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
பாலியல் புகாரில் சிக்கிய வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கத் தலைவர்!

தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டவரும் பிரபாகரன் ஏற்கனவே எல்பின்(ELFIN) நிறுவனத்தில் ஏஜெண்டாகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல கோடி பண மோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு போலீசார் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி