ஆப்நகரம்

ரோடு ஃபுல்லா குப்பை, நோய் அபாயம்: திருச்சி எனும் ஸ்மார்ட் சிட்டி!

திருச்சி மாவட்டம் எடமலைப்பட்டி புத்தூர் அருகே மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழாவது அகற்றக் கோரி பொதுமக்கள் மன்றாடுகின்றனர்.

Samayam Tamil 18 Apr 2021, 6:03 pm
திருச்சி மாநகராட்சியை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவதற்கான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சி சுத்தமான நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு வகையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
Samayam Tamil ரோடு ஃபுல்லா குப்பை, நோய் அபாயம்: திருச்சி எனும் ஸ்மார்ட் சிட்டி!


ஆனால், இந்த நேரத்தில் எடமலைப்பட்டி புத்தூர் சர்வீஸ் சாலையோரங்களில் குப்பை மலை போல் குவிந்து கொண்டே செல்வது அதிகாரிகள் யாருக்கும் தெரியவில்லை.

இங்குக் கொட்டப்படும் குப்பைகளால் இந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிக்கு ஓரிரு நாளில் தட்டுப்பாடு; பீதியை கிளப்பும் அதிகாரிகள்!

கொரோனா காலத்திலும் இந்த குப்பைகள் பற்றி மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இங்கிருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

மாஸ்க் போடாமல் வந்தால் ரூ. 200 அபராதம் விதிக்கும் அரசு, சுகாதாரத்தைப் பேண வழக்கமாகச் செய்ய வேண்டிய பணிகளையே செய்யாமல் இழுத்தடிப்பு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி