ஆப்நகரம்

தேர்தல் பணிக்கு ஆயிரம்னு சொல்லிட்டு ரூ. 250 கொடுத்த திருச்சி அதிகாரிகள்!

திருச்சி பொன்மலைப்பட்டி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தற்காலிக சுகாதார பணியாளர்கள் ஊதியம் வழங்காததைக் கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 7 Apr 2021, 9:55 am
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. பல்வேறு பணிகளுக்கு வாக்குச்சாவடியில் தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்படுவர் வழக்கம்.
Samayam Tamil தேர்தல் பணிக்கு ஆயிரம்னு சொல்லிட்டு ரூ. 250 கொடுத்த திருச்சி அதிகாரிகள்!


இந்த முறை கொரோனா காரணமாகத் தற்காலிக சுகாதார பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதன்படி திருச்சி பொன்மலைப்பட்டி தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களைத் தற்காலிக சுகாதார பணியாளர்களாக அதிகாரிகள் அமர்த்தினர்.

இந்த பணிக்காக அவர்களுக்கு ஊதியமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் சொன்னதை விட்டு ரூ. 250 மட்டுமே தரமுடியும் எனக் கூறியுள்ளனர்.

அரை நிர்வாணமாகத் திருச்சியில் ஓட்டுப்போட்ட அய்யாக்கண்ணு!

ஆனால் அதை வழங்குவதிலும் குறிப்பிட்ட அதிகாரிகள் கால தாமதம் செய்துள்ளனர். இதனால் தற்காலிக தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள், பட்டதாரி இளைஞர்கள் வாக்குச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதனால் வாக்குச்சாவடியில் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி