ஆப்நகரம்

விவசாயிகள் சார்பில் ராக்கெட் விடும் போராட்டம்

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 மேற்பட்ட விவசாயிகள் பிரதமருக்கு காகித ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Samayam Tamil 30 Nov 2020, 4:05 pm
நாடு முழுக்க தற்போது ஒரே பேசுபொருள், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம்தான். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களின் பிற பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil விவசாயிகள் போராட்டம்


அந்த வகையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு விவசாயிகள் ராக்கெட் விடும் நூதன போராட்டம் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட்டது.

டெல்லியில் இயற்றப்பட்ட வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இலாபகரமான விலை கொடுக்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை தடைசெய்ய வேண்டும்,

978 போட்டிகளில் முதல்முறை... படுமோசமாக தோற்ற இந்திய அணி!

மேலும், “விவசாயிகளை இழிவுபடுத்து அவதூறாக சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்புவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200 மேற்பட்ட விவசாயிகள் பிரதமருக்கு காகித ராக்கெட் விடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பதில் வரும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி