ஆப்நகரம்

திருச்சியில் மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தை கைது!

தமது மகளையே திருமணம் செய்ய முயன்ற தந்தையை திருச்சி ஏர்போர்ட் பகுதி போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 23 Jan 2021, 6:15 pm
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருக்கு 2 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் கணவர் 10 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார்.
Samayam Tamil மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தை கைது
திருச்சியில் மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தை கைது


இதனையடுத்து வெங்கடேஷ் என்பரை ராணி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், முதல் கணவரின் மகளை தனக்கு திருமணம் செய்து வைக்க கூறி வெங்கடேஷ் வற்புறுத்தியுள்ளார்.

குடிபோதையில் காதல் மனைவியைக் கொன்ற கணவன்

மகள் என்றும் பாராமல் அவரை திருமணம் செய்த கொடுக்க சொன்ன தமது கணவரை ராணி கண்டித்துள்ளார். அவரது இந்த விருப்பத்துக்கு ராணியின் மகளும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரடைந்த வெங்கடேஷ் கிரிக்கெட் மட்டையால் தன் மகளையே தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சசிகலாவுக்காக வெக்காளியம்மன் பக்தர்களாக மாறி ஆதரவாளர்கள்!

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

அடுத்த செய்தி