ஆப்நகரம்

வேற லெவலில் நடைபெறவுள்ள என்ஐடி பட்டமளிப்பு விழா!

திருச்சி என்.ஐ.டி.யில் முதன்முறையாக ஆன்லைன் மூலம் பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் 1,777 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளனர்.

Samayam Tamil 5 Nov 2020, 3:53 pm
திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் (என்ஐடி) 16 ஆவது பட்டமளிப்பு விழா வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடைபெறவுள்ள இந்த விழாவில் மொத்தம் 1,777 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
Samayam Tamil என்ஐடி -திருச்சி
திருச்சி -என்ஐடி


திருச்சி என்ஐடி வளாகத்தில் உள்ள பார்ன் ஹாலில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் விப்ரோ நிறுவன நிறுவனர் மற்றும் தலைவர் அஸிம் பிரேம்ஜி முதன்மை விருந்தினராக கலந்து கொள்கிறார். என்ஐடி ஆளுநர் குழு தலைவர் பாஸ்கர் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்.

இதுகுறித்து தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் மினிஷாஜிதாமஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " முதன்முறையாக ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த பட்டமளிப்பு விழாவில், 1,777 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது சாதனை எண்ணிக்கையாகும்.

இதில் பி.டெக், பி. ஆர்க், எம்.ஆர்க், எம்.டெக், எம்எஸ்சி, எம்சிஏ, எம்பிஏ, எம்.எஸ். உள்ளிட்ட படிப்புகளில் மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர். முனைவர் பட்டப்படிப்பு மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 98 இல் இருந்து இந்த ஆண்டு 173 ஆக உயர்ந்துள்ளது. 15 மாதங்களில் 76% அதிகரித்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி