ஆப்நகரம்

காணாமல் போன சிறுவன் சாக்கடையில் சடலமாக கண்டெடுப்பு

காணாமல் போனதாக கருதப்பட்ட சிறுவன், வீட்டின் அருகே சாக்கடையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 24 Dec 2020, 5:34 pm
திருச்சி தென்னூர், அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் பிரேம்குமார். கூலித்தொழிலாளியான இவரின் 5 வயது மகன் யஸ்வந்த். நேற்று இரவு வீட்டின் அருகில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனதாக கூறப்படுகிறது.
Samayam Tamil திருச்சி தென்னூர்
திருச்சி -தென்னூர் - கழிவுநீரிில் விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு


அப்போது வீட்டின் அருகில் உள்ள சுமார் 5 அடி ஆழமுள்ள சாக்கடையில் சிறுவனின் சடலம் கிடப்பதாக அருகில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து உயிரிழந்த சிறுவன் யஸ்வந்த் உடலை வெளியே எடுத்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து தில்லை நகர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.

கடத்தல் தங்கம்... இன்றைய பறிமுதல் விவரம்!

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி