ஆப்நகரம்

பொங்கல் ஷாப்பிங் பரபரப்பில் இப்படி ஒரு அதிர்ச்சி!

திருச்சி காந்தி மார்க்கெட் சந்தையில் பூக்கள், கரும்பு, மஞ்சள் கொத்து, பழங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Samayam Tamil 13 Jan 2021, 6:09 pm
திருச்சி காந்தி மார்கெட்டில் வரத்து குறைந்ததால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது. பண்டிகை காலம், மழையின் தாக்கத்தால் அடுத்த 2, 3 நாட்களுக்கு விலை குறைய வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
Samayam Tamil பொங்கல் ஷாப்பிங் பரபரப்பில் இப்படி ஒரு அதிர்ச்சி!
பொங்கல் ஷாப்பிங் பரபரப்பில் இப்படி ஒரு அதிர்ச்சி!


அதே வேளையில் வரத்துக் குறைவு காரணமாகப் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ 2000 ரூபாய்க்கும், காக்கரட்டான் 900 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 1000 ரூபாய்க்கும் சாமங்கி 100 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 100 ரூபாய்க்கும் , செவ்வந்தி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கட்டு கரும்பு 250லிருந்து 300 ரூபாய் வரைக்கும், மஞ்சள் கொத்து 20 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பூக்களின் விலை மிகவும் அதிகரித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி: வதந்தி பரப்புவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர்

தொடர் மழையின் காரணமாக வரத்துக் குறைவாக உள்ளதால் பூக்களின் விலை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அடுத்த செய்தி