ஆப்நகரம்

என்னவொரு தைரியம்..? பேண்ட் பாக்கெட்டில் வைத்து தங்கம் கடத்தல்!

சிங்கப்பூரிலிருந்து ஊர் திரும்பும்போது கடத்தல் தங்கத்தை கொண்டு வந்த மூன்று பேரிடம் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 12 Dec 2020, 10:30 am
வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் சிறப்பு விமானங்களில் தங்கம் கடத்தி வரப்பட்டதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.
Samayam Tamil தங்கம் கடத்தல்
தங்கம் கடத்தல் - திருச்சி விமான நிலையம்


இதனடிப்படையில் திருச்சி விமான நிலையத்தில் அவர்கள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது கடலூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 152 கிராம் எடை கொண்ட 7.65 ரூபாய் லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

யார் பார்த்த வேலையோ? - எம்ஜிஆர் சிலைக்கு காங்கிரஸ் துண்டால் முக்காடு!

இதேபோல் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த நாகை பழையாறையை சேர்ந்த முகமது சாதிக் என்பவரிடம் 1,128 கிராம் எடைகொண்ட 56.61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்ததும் கண்டறியப்பட்டது.

அதே விமானத்தில் வந்த தஞ்சை முகமது ஜியாவுதீன் சாகிப் தனது உடலில் மறைத்து 896 கிராம் எடை கொண்ட 44.97 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை கடத்தி வந்ததும் தெரிய வருகிறது.

ஜவ்வாய் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகளை உடனே முடித்துக் கொள்ள அரிய வாய்ப்பு!

அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுரேஷ், முகமது சாதிக், முகமது ஜியாவுதீன் சாகிப் ஆகிய மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ 176 கிராம் கடத்தல் தங்கத்தின் மொத்த மதிப்பு 1 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி