ஆப்நகரம்

குட்கா வியாபாரி மீது குண்டாஸ் போட்டு திருச்சி கமிஷ்னர் அதிரடி...

திருச்சி மாவட்டத்தில் குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட வியாபாரி மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது. காவல்துறை ஆணையர் கார்த்திகேயன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Samayam Tamil 22 Oct 2021, 11:48 pm
திருச்சி தனிப்படை காவல்துறையினரும் கோட்டை காவல்துறையினரும் இணைந்து கடந்த மாதம் நடத்திய வாகன சோதனையின் போது மைசூரில் இருந்து வந்த முட்டைகோஸ் வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
Samayam Tamil குட்கா வியாபாரி மீது குண்டாஸ் போட்டு திருச்சி கமிஷ்னர் அதிரடி...


அப்போது அதில் 30. 50 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருள் கடத்தி வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. போதைப் பொருட்கள் மற்றும் செயற்கை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை செய்ததில் திருச்சி கம்பரசம்பேட்டை கணபதி நகரைச் சேர்ந்த விஜயபாஸ்கர்(50) என்பவர் கேட்டுக்கொண்டதன் பேரில் மைசூரில் உள்ள பவர்லால் என்பவரால் அனுப்பி வைக்கப்பட்டது என்பது தொிய வந்தது.

திருச்சி கல்லூரியில் வைத்து ஒருதலை காதல் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை, 5 லட்சம் அபராதம்!
இதனை தொடர்ந்து விஜயபாஸ்கர் மற்றும் முத்து ஆகியோரை கோட்டை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் திருச்சி மத்திய சிறையில் அவர்களை அடைத்தனர்.

இந்த நிலையில் குட்கா வியாபாரி விஜயபாஸ்கரை, கோட்டை காவல் துறையினரின் பரிந்துரை பேரில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குட்கா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் நேரடியாக அடைக்கப்பட்டார்.

அடுத்த செய்தி