ஆப்நகரம்

கொரோனா சிகிச்சை...அமைச்சரின் லேட்டஸ்ட் அப்டேட்!

உலகில் கொரோனா இரண்டாவது அலை அடித்துவரும் நிலையிலும் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 10 Nov 2020, 4:52 pm
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உள்ளாட்சித் துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு அமைச்சர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் கூறியது:
Samayam Tamil அமைச்சர் விஜயபாஸ்கர்
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்


கொரோனா காலத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி களத்துக்கு சென்று ஆய்வு கூட்டங்கள் நடத்துகிறார். அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்று கொரோனாவுக்கு ஆளோவோரின் நலன் குறித்து நேரில் கேட்டறிந்து வருகின்றனர்.

உலகின் சில பகுதிகளில் கொரோனாவின் இரண்டாம் அலை அடித்துவரும் நிவையில், தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. மாநில முழுவதும் தற்போது தொற்றுக்கு ஆளானோரின் 10 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சியில் கொஞ்சம் அதிகரித்துள்ள கொரோனா... தீபாவளி பர்சேஜ் காரணமா?

அமைச்சர் துரைக்கண்ணுக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.இருந்தும் அவர் உயிரிழந்தார். அவரின் மரணத்தில் ஸ்டாலின் யாரை குற்றம்சாட்டுகிறார் என தெரியவில்லை.

அரசியல் செய்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது அமைச்சரின் மரணத்தில் ஸ்டாலின் அரசியல் செய்வதும், .அநாகரிகமாக பேசுவதும் ஏற்புடையதல்ல.
அமைச்சர் துரைக்கண்ணுவின் மரணம் குறித்து அவதூறு கருத்துக்கள் கூறிய எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது வழக்கு தொடுக்கப்படும்.

கொரோனா எங்களை என்ன செய்யும்? - திருச்சி கடைவீதிகளில் தீபாவளி பர்சேஜுக்கு குவியும் மக்கள்!

மருத்துவப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அதன் பிறகு ஓரிரு நாளில் மாணவர்களுக்கு நேரில் கலந்தாய்வு நடத்தப்படும். மக்கள் தீபாவளியை சுயக்கட்டுப்பாடுடன் கொண்டாடினால் கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி