ஆப்நகரம்

குடிபோதையில் காதல் மனைவியைக் கொன்ற கணவன்

சந்தேகமடைந்து கதவைத் திறந்து பார்த்த பொழுது தரையில் ராஜேஸ்வரி கையில் ரத்தம் வழிந்த படி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

Samayam Tamil 22 Jan 2021, 12:21 pm
திருச்சி தில்லைநகர் 7வது கிராஸ் பகுதியிலுள்ள செங்குளத்தான் கோவில் தெருவில் வசித்து வருபவர் தவசீலன் (27) தில்லைநகர் பகுதியில் புரோட்டா மாஸ்டர் ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி ( 22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டு தில்லை நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
Samayam Tamil ராஜேஸ்வரி-தவசீலன்


இவர்களுக்கு 5 வயதில் சாய் பிரசாத் என்ற மகனும் 2 வயதில் கவிநிலா என்ற மகளும் உள்ளனர். சமீபகாலமாக ராஜேஸ்வரி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருந்ததை கவனித்த தவசீலன், கடந்த சில நாட்களாக மன்னார்குடியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வரும்படி மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகறாறு நடந்ததாக அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த தவசீலன், மனைவி ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இவர்களது வீட்டின் அருகில் உள்ள ராஜேஸ்வரியின் உடன்பிறந்த சகோதரி சகுந்தலா மற்றும் அவரது குடும்பத்தினர் இருவரையும் சமாதானம் படுத்தியுள்ளனர். இந்நிலையில் வழக்கம்போல் விடியற்காலை 3 மணிக்கு துணி துவைப்பதற்காக வெளியே வந்த சகுந்தலா தனது சகோதரியான ராஜேஸ்வரி வீட்டில் இருந்து பாடல் சத்தம் அதிக அளவில் கேட்டுக்கொண்டிருந்தது. மேலும் வீட்டின் வெளிப்புற தாப்பாள் போடப்பட்டிருந்ததை கண்டு சந்தேகமடைந்து கதவைத் திறந்து பார்த்த பொழுது தரையில் ராஜேஸ்வரி கையில் ரத்தம் வழிந்த படி இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கிட்னி பீன்ஸ் உடலுக்கு வழங்கும் அற்புதமான 12 நன்மைகள்? அடிக்கடி சாப்பிடுங்க!

மேலும் தாயின் உடல் அருகே பிள்ளைகள் இருவரும் அழுதபடி நின்று கொண்டிருந்தனர். உடனடியாக தில்லை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடம் வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து அருகில் உள்ளவர்கள் இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது 5 வயதான ராஜேஸ்வரி மகன் சாய் பிரசாத் போலீசாரிடம் கூறும்போது தனது தாயை தந்தை (தவசீலன்) கட்டையால் அடித்தும், கழுத்தை நெரித்ததாகவும் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேஸ்வரியின் செல்போனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் தவசீலன் மன்னார்குடிக்கு தப்பி ஓடியிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்...

அடுத்த செய்தி