தமிழகத்தில் உள்ள சக்தி கோயில்களில் திருச்சி மாவட்டம், சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் மிகவும் பிரசித்திப் பெற்றதாகும். இந்த கோயிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 6 நாட்களில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் சி. கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் சு. ஞானசேகர், வெக்காளியம்மன் கோயில் உறையூர் மோகனசுந்தரம், திருச்சி இந்து சமய அறநிலையத்துறை சமயபுரம் மாரியம்மன் கோயில் மேலாளர் ம.லட்சுமணன் மற்றும் செயல் அலுவலர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர்.
அதன்படி கடந்த 6 நாளில் 46 லட்சத்து 63 ஆயிரத்து 853 ரொக்கம், 1 கிலோ 007 கிராம் தங்கம், 1 கிலோ 160 கிராம் வெள்ளி, 19 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்கப் பெற்றன என கோயிலின் செயல் அலுவலரும், இணை ஆணையருமான சி.கல்யாணி தெரிவித்தார்.
அதன்படி கடந்த 6 நாளில் 46 லட்சத்து 63 ஆயிரத்து 853 ரொக்கம், 1 கிலோ 007 கிராம் தங்கம், 1 கிலோ 160 கிராம் வெள்ளி, 19 அயல்நாட்டு நோட்டுகள் கிடைக்கப் பெற்றன என கோயிலின் செயல் அலுவலரும், இணை ஆணையருமான சி.கல்யாணி தெரிவித்தார்.