ஆப்நகரம்

ஒரு நாளில் கடத்தல் நகரமாக மாறிய அரசியல் நகரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை!

திருச்சி விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் மதிப்பிலான 693 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுத் தொடர்பாக 4 பேரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 22 Jan 2021, 11:05 am
சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி என்பவரிடம் ரூபாய் 8, லட்சத்து ஆயிரத்து 850 மதிப்பிலான 158 கிராம் தங்கம் இருந்துள்ளது.
Samayam Tamil ஒரு நாளில் கடத்தல் நகரமாக மாறிய அரசியல் நகரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை!
ஒரு நாளில் கடத்தல் நகரமாக மாறிய அரசியல் நகரம்: அதிகாரிகள் தீவிர விசாரணை!


அதேபோல், இதே விமானத்தில் பயணம் செய்த புதுக்கோட்டையைச் சேர்ந்த துரைசாமி என்பவரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்து 54 ஆயிரத்து 100 மதிப்பிலான 188 கிராம் தங்கமும் பெரம்பலூரைச் சேர்ந்த சத்யராஜ் என்பவரிடமிருந்து ரூபாய் 8 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பிலான 168 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவை தவிர சார்ஜாவிலிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த திருச்சியைச் சேர்ந்த நாகராஜ் என்பவரிடமிருந்து ரூபாய் 9 லட்சத்து 41 ஆயிரத்து 545 மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பிடிக்க வந்த போலீசுக்கு மண்டை உடைப்பு... குற்றவாளிகள் ஓட்டம்

நான்கு பேரிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் ரூபாய் 35 லட்சம் மதிப்பிலான 693 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி