ஆப்நகரம்

என்னது திருச்சி மேற்குல தேர்தல தள்ளி வைக்குறாங்களா? -கலெக்டர் விளக்கம்!

திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் தகவல் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Samayam Tamil 29 Mar 2021, 5:16 pm

ஹைலைட்ஸ்:

  • திருச்சி தில்லைநகர் போலீசாருக்கு பணபட்டுவாடா செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.
  • இதில் திமுக வேட்பாளர் கே.என்,நேருவின் பெயர் அடிப்பட்டது.
  • இதன் தொடர்ச்சியாக அங்கு தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கலெக்டர் திவ்யதர்ஷினி
திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப் பதிவு மெஷினில் வேட்பாளர்களின் பெயர்களை பொருத்தும் பணி இன்று தொடங்கியது.
திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெற்றுவரும் தேர்தல் பணியினை திருச்சி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி இன்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

வேட்பாளர்களின் பெயர் பொருத்தும் பணியை 24 மணி நேரத்தில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. பெட்டவாய்த்தலையில் பிடிபட்ட 1 கோடி ரூபாய் குறித்தும், காவல் நிலையங்களில் பிடிப்பட்ட பணம் குறித்தம் எஃப்ஐஆர் போடப்பட்டு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

திருச்சியில் போலீசாருக்கே கேஎன் நேரு பணப் பட்டுவாடா!

காவல் நிலையங்களில் பணம் பிடிபட்டதால் திருச்சி மேற்கு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம். அப்படி ஏதாவது என்றால் உடனடியாக ஊடகம் வாயிலாக பொதுமக்களுக்கு தொியப்படுத்தப்படும்.

விலைமாதர் வீட்டில் இருந்தவங்க இப்படிதான் பேசுவாங்க... ஆ.ராசாவை சாடிய ஹெச்.ராஜா!

காவலர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கை அறிக்கை அனுப்பபட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்தார்.

அடுத்த செய்தி