ஆப்நகரம்

திருச்சியில் ரத யாத்திரை; 18 அடி உயரத்தில் பிரமாண்டம்; கே.என்.நேரு வருகை!

திருச்சியில் முதல் முறையாக வரும் ஜூலை 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ புரிஜெகந்நாத் ரதயாத்திரை விழா நடைபெற உள்ளது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு வடம் பிடித்து துவக்கி வைக்கிறார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 28 Jun 2022, 5:26 pm

ஹைலைட்ஸ்:

  • திருச்சியில் ஜூலை 1ம் தேதி புரிஜெகன்தாத் ரத யாத்திரை
  • நவீன தொழில்நுட்பம் மற்றும் பழங்கால பாரம்பரியத்தின் கலவை
  • ஏர் பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் போன்ற அதி நவீன அம்சம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ரதம்
ரதம்
ஒடிசா மாநிலம் புரியில் நடைபெறும் ஜெகந்நாதா ரத யாத்திரை உலகப் பிரசித்தி பெற்றது. அது போன்ற ஒரு ரத யாத்திரை திருச்சியில் முதல் முறையாக வரும் ஜூலை 1ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து, 'ஹரே ராமா.. ஹரே கிருஷ்ணா..' இயக்கம் என்று அழைக்கப்படும், 'அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்' (இஸ்கான்) திருச்சி, ஸ்ரீரங்கம் மேலாளர் நந்தபுத்ர தாஸா பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது; திருச்சியில் முதல் முறையாக வரும் ஜூலை 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ புரிஜெகந்நாத் ரதயாத்திரை விழா நடைபெற உள்ளது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு வடம் பிடித்து துவக்கி வைக்கிறார். மாலை, 4 மணிக்கு மேலசிந்தாமணி அண்ணா சிலையில் இருந்து தொடங்கி, மாரிஸ் தியேட்டர் பாலம் வழியாக தில்லைநகர் மக்கள் மன்றத்தில் நிறைவடைய உள்ளது.

பாஜகவில் இணையும் ஓபிஎஸ்? ஷாக் கொடுத்த முன்னாள் அமைச்சர்!

புராண வரலாற்றின்படி, கிருஷ்ணர், பலராமர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை வைத்து நடைபெற உள்ள ரதயாத்திரையில், சாதி, மத பேதமின்றி, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த ரதத்தை வடம் பிடித்து இழுக்க உள்ளனர். நவீன தொழில்நுட்பம் மற்றும் பழங்கால பாரம்பரியத்தின் கலவையாக இந்த ரதம் இருக்கும்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பாரம்பரிய தோற்றம் இருந்தபோதிலும் ஏர் பிரேக்குகள் மற்றும் ஸ்டீயரிங் போன்ற அதி நவீன அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த ரதம், 18 அடி உயரம் கொண்டது. 12 அடி வரை குறைத்தும், தேவையென்றால் கூட்டவும் செய்யலாம். ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக வடம் பிடித்து இழுக்கலாம். இந்த ரத யாத்திரையின் போது மக்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தில்லைநகர் மக்கள் மன்றத்தில் கீர்த்தனைகள் மற்றும் நாடகங்கள் நடைபெற உள்ளன" என தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி